Tuesday, February 7, 2012

சிந்தனைக்குச் சில...


 இருவகை மக்களை இவ்வுலகில் பார்க்கின்றோம். பிறருடைய மகிழ்ச்சியான வாழ்வையும் சீர்சிறப்புக்களையும் பார்த்து தாமும் மகிழ்ந்து உவகையுறுகின்றார்கள் ஒருவகையினர். பிறருடைய சிறப்புக்களைக் கண்டு மனம் புழுங்கி அவர்களில் வெறுப்புக் கொண்டு பொறாமைப்படுகின்றார்கள் இன்னொரு பகுதியினர்.

இவர்களில் பிறராக்கம் கண்டு மகிழ்வோரே சந்தோஷமாகவும் மன அமைதியுடனும் வாழ்கின்றார்கள். பிறராக்கம் கண்டு பொறாமைப்படுவோர் மன அமைதி அற்றுஇ மன உறுத்தலுடன் வாழ்கின்றார்கள். மற்றவர் உயர்வைக் கண்டு பொறுக்க முடியாத குணத்தை அழுக்காறு என்பர். அவர்கள் மனமும் வாழ்வும் அழுக்கு நிறைந்ததாய்த் தீமையே விளைவிப்பதாய் இருக்கும். இதனையே திருவள்ளுவர்,

“அழுக்காறு எனஒருபாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்”

No comments:

Post a Comment